search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயிலின் தாக்கம்"

    • கடந்த பல நாட்களாக 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வந்தது.
    • திடீர் பலத்த இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் கடந்த பல நாட்களாக 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வந்தது. கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் குளிர்பானங்கள், பழ வகைகள் பல்வேறு குளுமையான பொருட்களை உட்கொண்டு வெயிலின் தாக்கத்தை குறைத்து வந்தனர். இதனை தொடர்ந்து காலையில் கடும் வெயிலும், மாலையில் திடீர் பலத்த இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் கடந்த 2 நாட்களாக காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் வெயில் அளவு இருந்து வந்ததால் பொதுமக்கள் மீண்டும் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வந்தனர்.

    நேற்று மாலை முதல் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்ததோடு குளிர்ந்த காற்று வீசி மழை பெய்து வந்தது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம், விருத்தாச்சலம், சிதம்பரம் ,லால்பேட்டை, ட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் திடீர் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருபுறம் கடும் வெயிலும் மற்றொருபுறம் திடீர் மழையும் இருந்து வருவதால் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:- விருத்தாசலம் - 12.0, பரங்கிப்பேட்டை - 11.2 , மீ-மாத்தூர் - 8.0 4. லால்பேட்டை - 6.0 , ஸ்ரீமுஷ்ணம் -5.1 6, காட்டுமன்னார்கோயில் - 4.0 7. ,குப்பநத்தம் - 3.2 , கொத்தவாச்சேரி - 3.0 , பண்ருட்டி - 2.0 , குறிஞ்சிப்பாடி - 2.0 11. அண்ணாமலைநகர் - 2.0 , புவனகிரி - 2.0 , சேத்தியாதோப்பு - 2.0 .. பெல்லாந்துறை - 1.8 , சிதம்பரம் - 1.5 , கலெக்டர் அலுவலகம் - 1.4 , கடலூர் - 1.3 , வடக்குத்து - 1.௦ கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 69.50 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • மே மாதம் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 29-ந்தேதி முடிவடைந்தது.
    • இன்று காலை 11.30 நிலவரப்படி 101.12 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 29-ந்தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் குறையும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 15 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வருவதோடு, அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.

    இதன் காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டு வருவதோடு, பழச்சாறுகள், நுங்கு, கரும்பு சாறு, குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்தி வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் குறைத்து வருகின்றனர். இருந்த போதிலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காலை நேரங்களில் கடும் வெயில், மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வந்ததால் சீதோஷ்ண மாற்றமும் ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்ச வெயிலாக 104.36 டிகிரி அளவில் வெயில் அளவு பதிவாகி கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இன்று காலை 11.30 நிலவரப்படி 101.12 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது.

    இதுகுறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருவதை காண முடிகிறது. மேலும் சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவாகி வருவதால் அனல் காற்று வீசி வருவதோடு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இருந்து கடுமையான அனல் காற்று வீசி வருவதால் வறண்ட வானிலை ஏற்பட்டு கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் சரியான முறையில் நிலை கொண்டு மழை அதிகளவில் பெய்து வந்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புண்டு. இது மட்டுமின்றி கிழக்கு திசையில் இருந்து வரக்கூடிய ஈரப்பதகாற்று சரியான முறையில் வரவில்லை. ஆகையால் தமிழக அரசின் அறிவுறுத்திலின் பேரில் பொதுமக்கள் காரணமின்றி வெளியில் சுற்றுவதை குறைத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறினார்.

    • வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்த காரணத்தினால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி திறக்கவில்லை.
    • ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்க ளிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது.

    கடலூர்:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று வீசிய காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் பாதிப்படைந்து வந்தனர். 

    இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்த காரணத்தினால் மாணவர்கள் நலன் கருதி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 12-ந் தேதியும் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    கூடுதலாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தமிழக முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகள் என 2200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதில் இன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 1200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

    இதனை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர். அப்போது ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்க ளிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளியில் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் நாள் என்பதால் காலை முதல் முக்கிய சாலைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன ங்களில் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்றதை காண முடிந்தது.

    பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றதையும் காணமுடி ந்தது. கடலூரில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களு க்கு ரோஜா பூ மற்றும் பன்னீர் தெளித்தும், இனிப்பு வழங்கியும் ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.
    • நடப்பாண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடு கையில் அதிகமாகவே இருந்தது என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி பகலில் அதிகபட்சமாக 106.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. அதன் பின்னர் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் குறையாமல் தொடர்ந்தது. அவ்வப்போது பெய்த கோடை மழையால் ஓரிரு நாட்கள் வெயிலின் தாக்கம் குறைந்தாலும், நடப்பாண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடு கையில் அதிகமாகவே இருந்தது என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    கோடையின் உக்கிரமாக காலமான அக்னி நட்சத்திரத்துக்கு பின்னர் வெயிலின் தாக்கம் குறைந்து விடும் என்று எதிர் பார்க்கப்பட்ட வேளையில் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பது, மக்களை கவலையடைய செய்துள்ளது.

    இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:-

    சேலத்தில் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவியதால், அனல் காற்று வீசிய நிலையில் அதன் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையிலும் மழை பெய்யாமல் உள்ளது. சேலத்தில் நேற்று 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இன்றும் காலை முதல் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால், பகல் நேரத்தில் வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது.

    தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் அவ்வப்போது குடிநீர் அருந்த வேண்டும். வெயிலில் உலாவ விடக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடுவதை தவிர்க்க வேண்டும்.
    • செல்லப் பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக் கூடாது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கோடை தொடக்கத்திலேயே வெப்ப அலைகள் அதிகமாக இருப்பதால் வெப்பம் மற்றும் வெப்ப அலைபாதிப்புக்களை தடுக்க செய்ய வேண்டியவை வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவுறுத்துள்ளார்.

    இது குறித்து தருமபுரி கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    உடலின் நீர்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், பயணத்தின் போது குடிநீரை பாட்டிலில் எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.ஆர்.எஸ். எலுமிச்சை சாறு, இளநீர், வீட்டில் தயாரித்த நீர் மோர், லஸ்ஸி, புளித்த சோற்று நீர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்கவும், பருவகால பழங்கள், காய்கறிகள், மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.

    வெயில் அதிகமாக இருக்கும் போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையின் பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

    குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்தி விட்டு வெளியே செல்லக் கூடாது. பருக இளநீர் போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தனியே வசிக்கும் முதியவர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

    கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் பாதுகாப்பான முறையில் கட்டிவைக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடுவதை தவிர்க்க வேண்டும்.

    செல்லப் பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக் கூடாது. கோடை வெயிலின் தாக்கத்தால் வெப்ப சலனம் ஏற்பட்டு அதன் மூலம், இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்புள்ளது.

    கேஸ் சிலிண்டர்களை இரவி்ல் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊ அணைத்துவிட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மோட்டார் கொட்டைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து வந்ததையும் காண முடிந்தது.
    • சாதாரண மழையாக தொடங்கி விடிய இடி மின்னலுடன் கனமழைவிடிய கொட்டி தீர்த்த மழையாக மாறியது.

    கடலூர், மே.2-

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி யது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு 101 டிகிரி வெயில் பதிவானது குறிப்பிடத்தக்க தாகும். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து கடும் சுட்டெரிக்கும் வெயி லாக மாறி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் ஏப்ரல் மாதத்தில் திடீரென்று சில நாட்கள் காலையில் பனி பொழிவும், மதியம் சுட்டெ ரிக்கும் வெயில் இருந்து வந்தது.

    கடும் வெயில் காரண மாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து, சாலை ஓரங்களில் உள்ள பழசாறுகள் பல வகைகள் நுங்கு கரும்பு சாறு குளிர்பா னங்கள் போன்றவற்றை குடித்து வெயிலின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்தனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நடமாட்டம் உச்சி வெயில் நேரத்தில் குறைந்த அளவே காணப்பட்டு இருந்ததை காண முடிந்தது. இது மட்டும் இன்றி காலை மற்றும் மாலை நேரங்களில் கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் கூடி ஆனந்தமாக தண்ணீரில் விளையாடி குளித்தும் மகிழ்ந்ததோடு, கிராமங்கள் பகுதிகளில் நிலப் பகுதி களில் உள்ள மோட்டார் கொட்டைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து வந்ததையும் காண முடிந்தது.இந்த நிலையில் நாளை மறுதினம் மே 4-ந் தேதி முதல் கோடை வெயிலில் உச்சமாக கருதக்கூடிய அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் காலை மற்றும் மாலை நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வந்ததோடு வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ந்த காற்றும் வீசி வந்தது.

    நேற்று கடலூர் நெல்லிக்குப்பம் மேல்பட் டாம் பாக்கம், நடுவீரப்பட்டு, பாலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையானது நேற்று இரவு சாதாரண மழையாக தொடங்கி விடிய இடி மின்னலுடன் கனமழைவிடிய கொட்டி தீர்த்த மழையாக மாறியது.மேலும் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்ததால் குளிர்ந்த காற்று வீசி வந்ததோடு கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம், தலைமை தபால் நிலையம் எதிரில் மற்றும் முக்கிய சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தது வருகின்ற னர். வடகிழக்கு பருவ மழை தொடங்கினால் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்வது போல் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு அக்னி நட்சத்திரம் தொடங்கு வதற்கு முன்பு கனமழை பெய்தது குறிப்பிடத் தக்கதாகும். விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என்பதனை எதிர் நோக்கி இருந்த நிலையில் இந்த திடீர் கனமழை காரணமாக அனைவரும் மகிழ்ச்சியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு-

    வானமாதேவி - 187.0, கடலூர் - 109.4, கலெக்டர் அலுவலகம் - 104.1, பண்ருட்டி - 90.0, வடகுத்து - 88.0, குப்பநத்தம் - 87.6, வேப்பூர் - 80.0, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 79.5, விருத்தாசலம் - 69.0, ஸ்ரீமுஷ்ணம் - 68.3, காட்டு மயிலூர் - 60.0, சேத்தி யாதோப் - 52.4, கீழச்செரு வாய் - 49.0, லக்கூர் - 48.0, பெல்லாந்துறை - 40.0, லால்பேட்டை - 34.0, மீ-மாத்தூர் - 30.0, காட்டு மன்னார்கோயில் - 23.0, தொழுதூர் - 21.0, குறிஞ்சிப்பாடி -18.0, அண்ணாமலைநகர் - 9.0, கொத்தவாச்சேரி - 8.0, பரங்கிப்பேட்டை - 5.4 , புவனகிரி - 2.0, சிதம்பரம் - 1.0 என மொத்தம் - 1363.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.

    • தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது.
    • வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    சேலம்:

    தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது. வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கும் முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் 97.9 டிகிரி வெயில் பதிவானது.

    நேற்று 97.8டிகிரியாக பதிவாகி உள்ளது. வெப்பநிலை அதிகரித்து வருவதால், மதிய நேரங்களில் கடை வீதிகளில் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக சேலத்தில் பழச்சாறு கடைகள், தர்பூசணி கடைகள், இளநீர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக உள்ளது. 

    ×